பிரசாத் ஸ்டுடியோ - ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்கும் இசையமைப்பாளர் இளையராஜா

சென்னை பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்களிடம் 50 லட்ச ரூபாய் இழப்பீடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிரசாத் ஸ்டுடியோ - ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்கும் இசையமைப்பாளர்  இளையராஜா
x
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில், இசையமைப்பாளர் இளையராஜா 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்தார். சமீபத்தில் அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க ஸ்டுடியோ உரிமையாளர்கள் சாய் பிரசாத் மற்றும் ரமேஷ் ஆகியோரு உத்தரவிடுமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தனக்கு சொந்தமான பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்காமல், ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியது நியாயமற்றது என தெரிவித்துள்ளார். மேலும், தன் வசமுள்ள ஒலிப்பதிவு அரங்கில் தலையிட, பிரசாத் ஸ்டூடியோவுக்கு தடை விதிக்குமாறும் கோரியுள்ளார். இதனை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், 17-ஆம் தேதிக்குள் பதிலளிக்க ஸ்டூடியோ உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார். 


Next Story

மேலும் செய்திகள்