"ரஜினிக்கு சிறப்பு விருது" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

கோவா சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு நட்சத்திரத்திற்கான விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
x
கோவா சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு நட்சத்திரத்திற்கான விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் வரும் 20 ஆம் தேதி துவங்கி, 28ஆம் தேதி வரை கோவாவில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இடம்பெற உள்ளன. மேலும், தமிழில், ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட படங்களும், மலையாளத்தில் ஜல்லிக்கட்டு, உயரே, கோலாம்பி உள்ளிட்ட படங்களும், இந்தியில் உரி, கல்லி பாய், சூப்பர் 30 உள்ளிட்ட படங்களும் திரையிடப்பட உள்ளன. கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாஹிப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. மேலும் சிறப்பு நட்சத்திரத்திற்கான விருது, நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். இதனிடையே, தனக்கு விருது அறிவிப்பதற்காக மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்