Dharmapuri கொதித்தெழுந்த பெண்கள் - மதுபானக் கடைகளை அடித்து நொறுக்கிய சம்பவம்

கொதித்தெழுந்த பெண்கள் - மதுபானக் கடைகளை அடித்து நொறுக்கிய சம்பவம்

கொதித்தெழுந்த பெண்கள் - மதுபானக் கடைகளை அடித்து நொறுக்கிய சம்பவம்

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கிராமத்திற்குள் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த மதுபானக் கடைகளை பெண்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பென்னாகரம் அருகே போடூர் கிராமத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 4 மதுபானக் கடைகளால் சமூகச் சீர்கேடு ஏற்படுவதாக புகாரளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களே களத்தில் இறங்கி மதுக்கடைகளை அடித்து உடைத்தனர்.. தொடர்ந்து மதுவிற்பனை செய்துவந்த நபரை சுற்றிவளைத்த பெண்கள் மற்றும் சிறுவர்கள், அவரை ஓட ஓட விரட்டி அடித்தனர். கிராம மக்கள் மற்றும் பெண்களின் இந்த அதிரடி நடவடிக்கையால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

X

Thanthi TV
www.thanthitv.com