திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்ல யார் யாருக்கு அனுமதி - வெளியான முக்கிய தகவல்
திருப்பரங்குன்றம் மலைப்பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், கோயிலில் வழக்கம் போல பக்தர்கள் கூட்டம் குவியத் தொடங்கியுள்ளது. மதுரை மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக 144 தடை உத்தரவு அமலில் இருந்த நிலையில், தற்போது திருப்பறங்குன்றம் கோயிலில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. மலையுச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கும் தர்காவுக்கும் வழிபாடு செய்வதற்கு பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. இயக்கங்களோ கட்சிகளோ கூட்டமாக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பால், குடிநீர், பிஸ்கட் தவிர மற்ற உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை தொடர்கிறது.
Next Story
