படம் எடுக்க முயற்சி செய்ததால் யானை ஆக்ரோஷம் - பயணிகள் அச்சம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கோவை சாலையில் வந்த காட்டுயானையை வாகன ஒட்டிகள் படம் எடுக்க முயற்சி செய்ததால் யானை ஆக்ரோஷமாக ஒடியது.
படம் எடுக்க முயற்சி செய்ததால் யானை ஆக்ரோஷம் - பயணிகள் அச்சம்
Published on
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கோவை சாலையில் வந்த காட்டுயானையை வாகன ஒட்டிகள் படம் எடுக்க முயற்சி செய்ததால் யானை ஆக்ரோஷமாக ஒடியது. மஞ்சூர் - கோவை சாலையில் கீழ்குந்தா வழியாக அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த யானை ஒன்று, பேருந்தை வழிமறித்தது. இந்நிலையில் முன்னாள் சென்ற வாகனத்தில் இருந்து யானையை படம்பிடிக்க சிலர் முயன்றனர். அப்போது யானை சாலையில் அங்குமிங்கும் ஓடியது. இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com