தனியார் ஓட்டல் ஊழியர்கள் மீது தாக்குதல் - திருட்டை நேரில் பார்த்தவர் மீதும் தாக்குதல்

செல்போன்,பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள்
தனியார் ஓட்டல் ஊழியர்கள் மீது தாக்குதல் - திருட்டை நேரில் பார்த்தவர் மீதும் தாக்குதல்
Published on
சென்னை விருகம்பாக்கம் காந்தி நகர் மெயின் ரோட்டைச் சேர்ந்த ஹாராஜ் கான் என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். வேலை முடிந்ததும் ஓட்டல் வாசலில் நண்பர்கள் அயூப் கான், வாரிஸ் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர், இவர்களை தாக்கி 2 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு செல்போன்களை பறித்து சென்றனர். இதேபோல் திருட்டை நேரில் பார்த்த அழகுவேல் என்பவரையும் தாக்கி செல்போனை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த விருகம்பாக்கம் போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com