Chennai | ரூ.9 ஆயிரமாக உயர்வதாக அறிவிப்பு - சென்னையில் ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும் இறங்கிய பேரிடி
சென்னையில் மே 5 முதல் விடுதி கட்டணம் உயர்வதாக அறிவிப்பு வணிக சிலிண்டர் விலை உயர்வு காரணமாக சென்னையில் வரும் 5ஆம் தேதி முதல் PG தங்கும் விடுதிகளின் கட்டணம் உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு சிலிண்டர் விலை மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்வு காரணமாக, சென்னையில் தங்கும் விடுதிகளின் கட்டணம் உயர்த்தப்படுவதாக, தமிழ்நாடு ஐடி விடுதி உரிமையாளர்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 4 பேர் பகிர்ந்துகொள்ளும் ஏசி இல்லாத அறையின் கட்டணம் 6,500 ரூபாயாகவும், ஏசி வசதியுடன் 7,500 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 பேர் பகிர்ந்துகொள்ளும் ஏசி இல்லாத அறையின் கட்டணம் 7,000 ரூபாயாகவும், ஏசி வசதியுடன் 8,000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 2 பேர் பகிர்ந்துகொள்ளும் ஏசி இல்லாத அறையின் கட்டணம் 8,000 ரூபாயாகவும், ஏசி வசதியுடன் 9,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. விடுதிகளின் வசதியைப் பொறுத்து இந்தக் கட்டணங்கள் மாறுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
