BTS இசைக்குழு மீதான ஈர்ப்பால், கரூரில் இருந்து கொரியா செல்ல முயன்ற 3 அரசுப் பள்ளி மாணவிகளை, ரயில்வே போலீசார் காட்பாடியில் பத்திரமாக மீட்டனர்.

x

கரூர் மாவட்டம் தான்தோணிமலை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த 3 சிறுமிகள், கடந்த 4ம் தேதி வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பேருந்து நிலையம், ரயில்வே நிலையங்களில் உள்ள சிசிடிவிகளை ஆய்வு செய்தனர். இதில், 3 சிறுமிகளும் காட்பாடி ரயில்வே நிலையத்தில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் ரயில்வே நிலையத்தில் தேடியபோது, காணாமல் போன 3 சிறுமிகளையும் பத்திரமாக மீட்டனர். கொரியாவில் பிரபல BTS இசைக்குழு மீதான ஆர்வத்தால், அவர்களது இசைக்கச்சேரியை பார்க்க மாணவிகள் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்