

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இன்று காலை கோத்தகிரி அருகே உள்ள அளக்கரை சாலையை கடந்து கொண்டிருந்த கரடியை அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள்
புகைப்படம் எடுத்துகொண்டிருந்தனர். அப்போது கரடி அவர்களை கரடி துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தேயிலை செடிக்குள் சென்று கரடி ஒளிந்து கொண்டது. இதை தொடர்ந்து, வன விலங்குகளுடன் புகைப்படம் எடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.