பாகிஸ்தானில் இம்ரான் கட்சி போட்ட அதிரடி திட்டம் | Pakistan | Imran Khan

x

பாகிஸ்தானில் அனைத்து மாகாணங்களிலும் தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என இம்ரான் அதிரடியாக அறிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்டதில் இருந்து, ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் இம்ரான் கான், துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து ராவல்பிண்டி கட்சி கூட்டத்தில் கலந்துக்கொண்டார். அப்போது ஊழல் அரசியலில் இருக்க மாட்டோம் என அறிவித்த இம்ரான் கான், பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடியை கொடுக்கும் முயற்சியாக தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்