அம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம். மலர்கள், ஆபரணங்களுடன் சிறப்பு காட்சி - ஏராளமாக குவிந்த பக்தர்கள்

x
  • காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
  • மயானக் கொள்ளை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வில், பல்வேறு மலர்கள், ஆபரணங்கள் அணிந்து அங்காள பரமேஸ்வரி அம்மன் காட்சி அளித்தார்.
  • ஆடு, கோழி, மீன் இறைச்சி உள்ளிட்டவை சமைத்து, அங்காளம்மனுக்கு கும்ப படையலிட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
  • தொடர்ந்து, விமரிசையாக நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில், சுற்றுப்புறங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
  • பின்னர், அம்மனுக்கு படையலிட்ட அசைவ உணவுகள், பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்