"எல்லையில் தாக்குதல் நடத்த தயார்" - பாகிஸ்தானுக்கு ராஜ்நாத்சிங் பகீரங்க எச்சரிக்கை

x

தேவைப்பட்டால் எல்லையில் தாக்குதல் நடத்த இந்தியா தயாராக இருப்பதாக, பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில், தேசிய பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருவதாகத் தெரிவித்தார். உரி மற்றும் புல்வாமா தாக்குதலுக்கு பிரதமர் மோடி உடனடியாக தக்க பதிலடி கொடுத்ததை நினைவுகூர்ந்தார். எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடரும் பட்சத்தில், இந்தியா தாக்குதலை தீவிரப்படுத்தும் என்றும் ராஜ்நாத் சிங் எச்சரித்தார். ஜம்மு-காஷ்மீரில் அமைதி திரும்பியதும், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் விலக்கிக்கொள்ளப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்