அடிக்கடி போன் அடித்த தந்தை.. கோயில் குளத்தில் மிதந்த மகன் உடல் - பின்னணியில் கையேந்தி பவன்..!

x
  • திருவள ்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே, சிற்றுண்டி கடையில் பணம் தராததால் எழுந்த தகராறில், இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
  • சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர், சோழவரம் அடுத்த நல்லூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
  • கடந்த சில நாட்களாக, பிரவீன்குமாரின் அழைப்பு வராததால், சந்தேகமடைந்த அவரது தந்தை சக்திவேல், மகனை காணவில்லை என சோழவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, செல்லியம்மன் கோயில் குளத்தில், பிரவீன் குமாரின் உடல் மிதப்பது தெரியவந்தது.
  • உடலை மீட்ட போலீசார் பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், பிரவீன்குமார் கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசியதை உறுதிப்படுத்தினர்.
  • விசாரணையில், நல்லூர் பகுதியில் உள்ள சிற்றுண்டி கடையில் பிரவீன்குமார் உணவருந்த சென்றபோது, தகராறு ஏற்பட்டுள்ளது.
  • அப்போது, கடை உரிமையாளரான நரேஷ், உருட்டு கட்டையால் கண்மூடித்தனமாக தாக்கியதில், பிரவீன் குமார் உயிரிழந்தது தெரியவந்தது.
  • அதனைத் தொடர்ந்து நரேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்