பாலியல் வன்கொடுமை வழக்கு... வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பாலியல் வன்கொடுமை வழக்கு... வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Published on

10-ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு,10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பீஹாரில் இருந்து வேலை தேடி மகளுடன் சென்னை வந்த தாய், தனது மகளை தெரிந்தவர் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.

அப்போது, அந்த வீட்டில் பாதுகாவலராக இருந்த, ராகுல் குமார் என்பவர் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம், ராகுல் குமாருக்கு,10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

X

Thanthi TV
www.thanthitv.com