மிரட்டும் வடகிழக்கு பருவமழை - முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

x

வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை தொடர் நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

வடகிழக்கு பருவமழை கடந்த 29-ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பருவ மழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின், இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை, ஆழ்வார்பேட்டை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் இன்று காலை காலை 11.45 மணியளவில் காணொலி காட்சி மூலமாக இந்த கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்