கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு... 700 காளைகள் - 300 வீரர்கள் பங்கேற்பு

x

புதுக்கோட்டை அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். ஓட்டக்குளம் பகுதியில் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டில் பல மாவட்டங்களை சேர்ந்த 700 காளைகள் பங்கேற்றுள்ளன. அவற்றை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் களமிறங்கியுள்ளனர். வாடி வாசலில் இருந்து சீறி பாய்ந்து வரும் காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்