கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி போட்டியில் களமிறங்கிய சசிகலா, டிடிவி தினகரனின் காளைகள்

x

பொன்னமராவதி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், க.புதுப்பட்டியில் பெரிய கருப்பர் கோயில் திருவிழா முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 816 காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. குறிப்பாக, வி.கே சசிகலாவின் காளை களத்தில் இறங்கிய போது, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் காளை என விழா குழுவினரால் அறிவிக்கப்பட்டது. மேலும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் காளையும் போட்டியில் கலந்து கொண்டது.


Next Story

மேலும் செய்திகள்