பாரதியின் பேரனிடம் ஆசி பெற்ற மத்திய அமைச்சர் - சந்திப்பு குறித்து தமிழில் நெகிழ்ச்சி ட்வீட்

x

மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை ஒட்டி காசியில் பாரதியின் குடும்பத்தாரை சந்தித்து ஆசி பெற்றதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். காசிக்கு சென்ற அவர், பாரதியின் நினைவு இல்லத்துக்கு சென்று, அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், பாரதியின் பேரனான கே.வி. கிருஷ்ணனை சந்தித்த ஜெயசங்கர் அவரிடம் வாழ்த்து பெற்றார். இது தொடர்பான புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்த ஜெய்சங்கர், பாரதியின் குடும்பத்தாரை சந்தித்தது ஊக்கம் அளிப்பதாக தமிழில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்