எரிவாயு கசிந்து வெடி விபத்து...இடிந்து சிதைந்து சின்னாபின்னமான கடைகள் - பரபரப்பு காட்சிகள்

x

ஒசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் உள்ள முத்தா நல்லூர் பகுதியை சேர்ந்த செரிஃப் கேஸ் ஸ்டவ் பழுதுபார்க்கும் கடை நடத்தி வந்துள்ளார்... இக்கடையில் உரிய அனுமதி இல்லாமல் இரவு நேரங்களில் சிலிண்டர்களுக்கு எரிவாயு நிரப்பும் பணியும் நடந்து வந்ததாகத் தெரிகிறது. வழக்கம்போல இரவு நேரத்தில் செரிப் சிலிண்டரில் எரிவாயு நிரப்பிக் கொண்டிருந்த போது அதிக அழுத்தம் காரணமாக திடீரென எரிவாயு கசிந்து வெடித்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் அருகில் இருந்த 4 கடைகள் இடிந்து பலத்த சேதம் அடைந்ததுடன், செரிஃப் படுகாயம் அடைந்தார்... விபத்து தொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்