நடிகர் சூரியிடம் மோசடி.. விஷ்ணு விஷாலிடம் தீவிர விசாரணை - போலீஸிடம் சொன்னது என்ன? - வெளியான தகவல்

நில மோசடி வழக்கில், நடிகர் விஷ்ணு விஷால், அவரது தந்தை ரமேஷ் குடவாலா ஆகியோரிடம் விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அடுத்ததாக நடிகர் சூரியிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
x

நகைச்சுவை நடிகர் சூரியிடம் நிலம் வாங்கி தருவதாக பண மோசடி செய்யப்பட்ட வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. ரமேஷ் குடவாலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடிகர் சூரி 3 முறை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்தநிலையில் வழக்கு தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் குடவாலா ஆகியோருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். அதை ஏற்று இருவரும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் தனித்தனியாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நீண்ட நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் தங்கள் மீது எந்த குற்றமும் இல்லை என இருவரும் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்ததாக நடிகர் சூரியிடம் போலீஸார் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்