சமீபத்திய செய்திகள்

Sathyamangalam | Elephant | திடீரென ரூட்டை மாற்றிய ஒற்றையன்.. இரவில் அலறி ஓடிய மக்கள்

திடீரென ரூட்டை மாற்றிய ஒற்றையன்.. இரவில் அலறி ஓடிய மக்கள்

thanthitv

Sathyamangalam | Elephant | திடீரென ரூட்டை மாற்றிய ஒற்றையன்.. இரவில் அலறி ஓடிய மக்கள் #elephant #Sathyamangalam #thanthitv சத்தியமங்கலம் அருகே ஊருக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை தேசிய நெடுஞ்சாலையில் நடமாடியதால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த‌னர். அந்த சிசிடிவி காட்சிகளை பார்க்கலாம்.. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் பகுதியில், இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய தோட்டங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை திடீரென ஊருக்குள் நுழைந்து மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடியது. காட்டு யானை சாலையில் நடமாடுவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தோடு அலறி அடித்து ஓடினர். சாலையோரம் இருந்த பேக்கரியில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த பயணிகளும் யானை சாலையின் நடுவே நடந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறிது தூரம் நடந்து சென்ற காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

BREAKING || பெங்களூருக்கு அடித்த அபாய மணி - குடிநீருக்கு அதிரடி கட்டுப்பாடு

Breaking | Nellai Crime | தமிழகத்தை உலுக்கிய நெல்லை சம்பவம் | அதிரடி காட்டும் போலீசார்

Ammonia Gas Leak | தமிழகத்தை உலுக்கிய கோர சம்பவம் | 2வது நாளாக விஷவாயுவை அகற்றும் பணி

BREAKING || காலையே அதிர்ச்சி செய்தி...வேலைக்கு சென்ற போது நடந்த பயங்கரம்- துடிதுடித்து பலியான 4 பேர்

Train | Chennai | "ரத்து.." - சென்னை ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு