ஒரு வாரத்தில் 2,500 தாக்குதல் - ரஷ்யா மீது ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு வாரத்தில் ஆயிரத்து 300 ஆளில்லா விமானங்களையும், ஆயிரத்து 200 வான்வழி குண்டுகளையும் ஏவி தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். பல பிராந்தியங்களில் உயிரிழப்புகள், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள சூழலில், ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து எதிர்கொள்வோம் எனவும் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்