நைஜீரியாவின் வட மாநிலங்களில் நிலவும் வன்முறை மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக, கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் இல்லாத அளவுக்கு உணவுப் பற்றாக்குறை மோசமடைந்துள்ளதாக ஐநா சபை கவலை தெரிவித்துள்ளது. வன்முறை மற்றும் ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தலால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் போயுள்ளதால், ஒரு கோடியே 70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடும் உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.