#snapchat #snapchatissue குழந்தைகள் உயிரிழப்பால் ஸ்னாப்சாட்டுக்கு எதிராக நீதி கேட்டு பெற்றோர் போராட்டம் கலிபோர்னியா மாகாணத்தின் சாண்டா மோனிக்காவில் உள்ள பிரபல சமூக ஊடகத்தின் (snapchat) தலைமையகம் முன்பு, தங்கள் குழந்தைகள் உயிரிழப்புக்கு நீதி கேட்டு பெற்றோர் போராட்டம் நடத்தினர். சமூக ஊடகங்கள் குழந்தைகளை அடிமைப்படுத்தும் வகையில் திட்டமிட்டு வடிவமைக்கப்படுதாகவும், இதனால் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும், இது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இது போன்ற குற்றச்சாட்டுகளை நிறுவனங்கள் மறுத்தாலும், அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களுக்கு எதிரான எதிர்ப்பு வலுப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.