உலகப்புகழ் திருவாரூர் தேர் திருவிழா தேதி அறிவிப்பு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நடைபெறவுள்ள ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்று விழா கோலாகலமாக நடைபெற்றது. உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வருகிற மார்ச் 29ஆம் தேதி ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 54 அடி உயர கொடிமரத்தில் நந்தி உருவம் பொறித்த உற்சவக் கொடி மங்கள இசையுடன் ஏற்றப்பட்டது.