வடலூர் சத்திய ஞானசபையில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தை மாதம் வரும் பூச நட்சத்திரத்தன்று 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பக்தர்களின் வசதிக்காக அடிப்படை வசதிகள் அனைத்தும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாகன நிறுத்தங்கள், பேருந்து நிறுத்தங்கள் போன்றவை வடலூர் நகருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளது. 1,200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர