இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வேலையில்லாத் திண்டாட்டத்தின் உச்சக்கட்டம்தான் கோவையில் பொறியாளர்கள், பட்டதாரிகள் துப்புரவுப் பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். மேலும், ஏதோ ஒரு செயற்கை காரணங்களால் ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயமும் இருப்பதாக ஸ்டாலின் வேதனை தெரிவித்தார். எதிர்க்கால தலைமுறைகளின் வாழ்வில் விளையாடாமல், வேலையில்லா திண்டாட்டத்தை போக்கவும், ஐ. டி நிறுவனங்களில் ஆள் குறைப்பு நடவடிக்கையை தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுத்தினார்.