தமிழ்நாடு

மழை வேண்டி கழுதைகளுக்கு நடந்த திருமணம்...

திருச்சி அருகே மழை வேண்டி கிராம மக்கள் கழுதைகளுக்கு பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து வைத்தனர்.

தந்தி டிவி

* திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே வத்த மணியாரம்பட்டியில் நடந்த திருமண நிகழ்வு அப்பகுதி மக்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

* காரணம் வெகு விமரிசையாக கழுதைகளுக்கு நடத்தப்பட்ட திருமணத்தால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழை வேண்டி நடத்தப்பட்ட இந்த திருமண நிகழ்வில் மக்கள் ஒன்று கூடி கொண்டாடித் தீர்த்தனர்.

* பட்டு வேட்டியில் வந்த மணமகனுக்கும், பட்டு புடவை போர்த்தி வந்த பஞ்ச கல்யாணிக்கும் தங்கத் தாலி எடுத்துக் கொடுத்து கெட்டி மேளம் கொட்ட திருமணம் நடந்தது.

* அட்சதை தூவி மணமக்களை வாழ்த்திய மக்கள், பாரம்பரிய நிகழ்வான தேவராட்டத்தையும் ஆடி மகிழ்ந்தனர். நம் வீட்டு திருமணம் போலவே பாவித்த மக்கள், மொய் விருந்தையும் நடத்தி அமர்க்களப்படுத்தினர்.

* இந்த திருமணத்திற்காக பல கிராம மக்களும் ஒன்று கூடியது நிகழ்வின் சிறப்பாக அமைந்தது. மொத்தத்தில் பஞ்ச கல்யாணிக்கு நடந்த திருமணத்தால் அந்த ஊரே திருவிழாக் கோலமாக காட்சியளித்தது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்