Tollgate Tea Viral | "ஐயா இந்தாங்க குளிருக்கு இதமா சூடா டீ" - டோல்கேட்டில் ஸ்பெஷல் கவனிப்பு
ஓட்டுநர்களுக்கு டீ- சுங்கச் சாவடி ஊழியர்கள் அசத்தல். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டுநர்களுக்கு டீ கொடுத்து ஊழியர்கள் உதவினர். குளிர் காரணமாக நடுக்கத்துடன் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில், அவர்களுக்கு டீ வழங்க சுங்கச்சாவடி நிர்வாகம் முடிவெடுத்தது. சுங்கச் சாவடிகள் கட்டணம் வசூலிப்பது மட்டுமன்றி, இதுபோன்ற மனிதாபிமான உதவிகளையும் செய்வது ஓட்டுநர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.