தமிழ்நாடு

நெல் மூட்டைகள் சேதத்தை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? - தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகள் மழையால் சேதமடைவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில், சுமார் 50 ஆயிரம் மூட்டைகள், மழையால் நாசமானதாக, நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதன் அடிப்படையில், தானாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் பொதுநல வழக்காக எடுத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதாசுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை மே 22ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்