காந்தி ஜெயந்தியன்று மது விற்பனை - பெண் கைது
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காமராஜ் நகரில் காந்திஜெயந்தி விடுமுறை நாளில் கள்ளத்தனமாக மதுபானம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலின் பேரில் விரைந்த போலீசார், வசந்தி என்பவரது வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததை கண்டறிந்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.