Tiruvannamalai | திருவண்ணாமலையில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் - 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
#tiruvannamalai #temple #thanthitv
வார விடுமுறையை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் இத்திருக்கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். பொதுத் தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய 3 முதல் 4 மணி நேரமும், சிறப்பு தரிசனத்தில் 2 முதல் 3 மணி நேரமும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். தரிசனத்தை முடித்த பக்தர்கள், "ஓம் நமசிவாய" மந்திரம் முழங்க 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் பக்தி பரவசத்துடன் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.