தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி

மன்னார்குடி அருகே அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராயபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். பள்ளி வளாக சுற்றுச்சுவரில் 3 மாணவிகள் குறித்து அவதூறாக எழுதப்பட்டதை கண்டு மனமுடைந்து இந்த முடிவை அவர்கள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மயங்கி விழுந்த 3 மாணவிகளையும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆசிரியர்கள் சேர்த்தனர்.

பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 3 மாணவிகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து நீடாமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு