தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி

மன்னார்குடி அருகே அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராயபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். பள்ளி வளாக சுற்றுச்சுவரில் 3 மாணவிகள் குறித்து அவதூறாக எழுதப்பட்டதை கண்டு மனமுடைந்து இந்த முடிவை அவர்கள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மயங்கி விழுந்த 3 மாணவிகளையும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆசிரியர்கள் சேர்த்தனர்.

பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 3 மாணவிகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து நீடாமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்