தமிழ்நாடு

கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை - விவசாயிகள் குற்றச்சாட்டு

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடும் நிலையில், தஞ்சை அருகே கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

* கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடும் நிலையில், தஞ்சை அருகே கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

* மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் விநாடிக்கு 2 லட்சம் கனஅடி வீதம் பெருக்கெடுத்து செல்கிறது.

* இந்நிலையில் கல்லணையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூதலூர் அருகே புதுக்குடி, மனையேறிபட்டி, செங்கிப்பட்டி கிராமங்களுக்கு மாயனூரில் இருந்து கட்டளைக் கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

* ஆனால் இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வந்து சேராததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

* ஆடு, மாடுகள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை எனவும், வாய்க்கால்களை முறையாக தூர்வாராததே தண்ணீர் வராததற்கு காரணம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்