தமிழ்நாடு

செம்மரம் வெட்ட வந்ததாக 4 பேர் கைது : நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க முடிவு

செம்மரம் வெட்ட வந்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் திருப்பதி அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

செம்மரம் வெட்ட வந்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் திருப்பதி அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்.திருப்பதி அடுத்த சந்திரகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திரா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, தமிழகத்தில் இருந்து ஆந்திர நோக்கி சென்ற பேருந்தில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது விழுப்புரம் மாவட்டதை சேர்ந்த துரைராஜ், முனுசாமி,ராஜா, ராம்குமார் ஆகிய 4 பேரும் கோடாரி,அரிவாளுடன் இருந்ததால், செம்மரம் வெட்ட வந்திருப்பதாக கருதி 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில் அவர்கள் வனப்பகுதிக்குள் செல்லாததால் நல்லெண்ண அடிப்படையில், அவர்களின் உறவினர்களை வரவழைத்து திருப்பதி தாசில்தார் முன்னிலையில் விடுவிக்கவுள்ளதாக செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக