தமிழ்நாடு

செம்மரம் வெட்ட வந்ததாக 4 பேர் கைது : நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க முடிவு

செம்மரம் வெட்ட வந்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் திருப்பதி அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

செம்மரம் வெட்ட வந்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் திருப்பதி அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்.திருப்பதி அடுத்த சந்திரகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திரா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, தமிழகத்தில் இருந்து ஆந்திர நோக்கி சென்ற பேருந்தில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது விழுப்புரம் மாவட்டதை சேர்ந்த துரைராஜ், முனுசாமி,ராஜா, ராம்குமார் ஆகிய 4 பேரும் கோடாரி,அரிவாளுடன் இருந்ததால், செம்மரம் வெட்ட வந்திருப்பதாக கருதி 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில் அவர்கள் வனப்பகுதிக்குள் செல்லாததால் நல்லெண்ண அடிப்படையில், அவர்களின் உறவினர்களை வரவழைத்து திருப்பதி தாசில்தார் முன்னிலையில் விடுவிக்கவுள்ளதாக செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்