சுருக்கெழுத்து, தட்டச்சர் பணிக்கான நேர்முக தேர்வு வரும் 13ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தற்காலிகப் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர் என்றும், அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதம் வழங்க இயலாது எனவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.