தமிழ்நாடு

ஆன்லைனில் முட்டை ஆஃபர்- பெண்ணுக்கு ரூ.48,000 அபேஸ்.. மக்களை உஷார்!

தந்தி டிவி

பெங்களூரை சேர்ந்த அர்ச்சனா சிங் என்பவரது இ-மெயிலுக்கு, அதில், 49 ரூபாய்க்கு 48 முட்டைகள் விற்பனை செய்வதாக விளம்பரம் வந்துள்ளது. இதை நம்பிய அர்ச்சனா சிங், இ-மெயிலில் இருந்த லிங்கை கிளிக் செய்து, கிரெடிட் கார்டு தகவல்களை அளித்துள்ளார். அவரது செல்போனுக்கு வந்த ஓடிபி எண்ணையும் பதிவு செய்து 49 ரூபாயை அவர் செலுத்தியுள்ளார். அடுத்த சிறிது நேரத்தில், அவரது கிரெடிட் கார்டில் இருந்து 48 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. அதன்பிறகே, ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அர்ச்சனா சிங், மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்று, ஆஃபர் எனக்கூறி வரும் மெசேஜ், இ-மெயிலை நம்பி கிரெடிட், டெபிட் கார்டு தகவல்களை கொடுக்க வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்