சென்னை தாம்பரம் அருகே மருத்துவமனை வளாகத்தில் நுழைந்து ஒருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் முருகன் என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதுகுறித்து சேலையூர் போலீசார், மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை சேகரித்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.