மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் அதிமுக சார்பில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். வழிபாட்டிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், ஜெயலலிதாவின் வழியில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையை சரிசெய்ய முதலமைச்சர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்கள் எல்லாம் அரசியல் அடிப்படையிலேயே வைக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.