தேனியில் மகாவீரர் ஜெயந்தியன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், பழைய பேருந்து நிலையம் பின்புறம் கோயில் அருகே, படுஜோராக கள்ளச் சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாக வீடியோ ஒன்று வைரலாகியது. பொதுமக்கள் நடமாடும் பகுதியில் மது பாட்டில் விற்பனை மற்றும் அநாகரீகமாக நடந்து கொள்பவர்களுக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.