Kovai | Leopard | சாலையோரம் ஹாயாக ஓய்வெடுக்கும் சிறுத்தை | கவனமா போங்க மக்களே..
தடுப்புச்சுவர் மீது ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சிறுத்தை - எச்சரிக்கை கோவை மாவட்டம் வால்பாறையில், சாலையோரம் சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனச்சரகத்தில், வாட்டர்பால்ஸ் – டைகர் பள்ளத்தாக்கு அருகே தடுப்புச்சுவர் மீது சிறுத்தை ஒன்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்த காட்சியை சுற்றுலா பயணிகள் படம் பிடித்துள்ளனர். வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி சாலைகளில் உலா வருவதால், வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.