தமிழ்நாடு

ராம்நாட்டில் முளைத்த புது `கல்யாண ராணி' - பல ஆண்களை பதற வைத்த பெண் | Karur | Ramanathapuram

தந்தி டிவி

கரூர் மாவட்டம், புஞ்சை கடம்பக்குறிச்சியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன் கோவை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரேணுகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது 6 பவுன் தாலிக்கொடி, ஒரு பவுன் தங்கத்தோடு, அரை பவுன் மோதிரம் ஆகியவற்றை ரேணுகாவுக்கு ரமேஷ் போட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேணுகாவுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் சந்தேகம் அடைந்து விசாரித்தபோது, அவருக்கு ஏற்கெனவே மெய்யர் என்பவருடன் திருமணமாகி குழந்தைகள் இருப்பதும், பின்பு பழனிகுமார், ராஜ், முபாரக் ஆகியோருடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்து ரமேஷ் அதிர்ச்சி அடைந்தார். மேலும், கோவையில் லோகநாதன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு சில நாட்களில் பணம், நகைகளுடன் அங்கிருந்து வெளியேறி, அதன் பிறகு ரமேஷை திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இந்த விஷயங்கள் அனைத்தும் தெரிந்துவிட்டதை அறிந்து, கடந்த 15-ஆம் தேதி திருமணத்தின்போது போட்ட நகைகளுடன் அவர் வீட்டை விட்டு ஓடிவிட்டார். பின்னர், அவரின் கூட்டாளி ஜெகநாதன் என்பவர் மூலமாக ரமேஷிடம் 20 லட்சம் பணமும், 20 பவுன் நகையும் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில், ரேணுகாவை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"