திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவின் நான்காம் நாளையொட்டி, நாக வாகனங்களில் விநாயகர், சந்திரசேகரர் சுவாமிகள் மாடவீதியுலா எழுந்தருளினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டது.