குமரி அருகே நடு கடலில் கவிழ்ந்த படகு - மீனவர்கள் மீட்பு கன்னியாகுமரி அருகே கடலில் கவிழ்ந்த படகை மீட்டு சக மீனவர்கள் கரை சேர்த்தனர்... கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ஐந்து பேர் கடலுக்கு நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்றனர். மீன் பிடித்த பின் கரை திரும்பும் போது ராட்சச அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. மீனவர்கள் சக மீனவர்களின் உதவியுடன் மீட்டனர். கவிழ்ந்த படகை அப்பகுதி மீனவர்கள் கடும் முயற்சி மேற்கொண்டு கரை சேர்த்தனர். படகு கவிழ்ந்ததால் படகில் காணப்பட்ட எந்திரம், வலைகள் சேதமடைந்தன.