தமிழ்நாடு

சட்ட விரோத கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சட்ட விரோத கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

தந்தி டிவி

செம்மர கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பில்லியர்ட்ஸ் விளையாட்டு வீரரான பொறியியல் மாணவர், ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்ததற்காக கைது செய்யப்பட்டதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டதை ஏற்று கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

உச்ச நீதிமன்ற விதிகளையும், சட்டத்தையும் மீறி கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளும் காவல் துறையினருக்கு எதிராகவும், இயந்திரத்தனமாக சிறையிலடைக்க உத்தரவு பிறப்பிக்கும் மாஜிஸ்திரேட்களுக்கு எதிராகவும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட உயர்நீதிமன்றம் தயங்காது என்றும் நீதிபதி எச்சரித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி