தமிழ்நாடு

அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர்கள் தரமில்லாத‌தால் வீணாகிறது - பொதுமக்கள் குற்றச்சாட்டு

அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர்கள் தரமில்லாத‌தால், பழைய இரும்பு கடைகளில் சொற்ப விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தந்தி டிவி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இந்திராநகர் பகுதியில் உள்ள இரும்பு கடைகளில் அரசின் இலவச மிக்ஸி , கிரைண்டர்கள் குவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கடை உரிமையாளரிடம் கேட்டபோது, பொருட்கள் தரமில்லாத‌தால், மக்கள் பழைய இரும்பு கடைகளில் சொற்ப விலைக்கு கொடுத்துவிடுவதாக தெரிவித்தார். கடை உரிமையாளர்கள் மிக்ஸி கிரைண்டர்களை உடைத்து, அதில் உள்ள காப்பர் , மோட்டார் போன்ற முக்கிய பொருட்களை மட்டும் எடுத்து கொண்டு தூக்கி எறிந்து விடுகின்றனர். ஏழை மக்களுக்காக அரசு கொடுத்த விலையில்லா பொருட்கள், தரமில்லாத‌தால் இவ்வாறு வீணாகி வருவதாக பொதுமக்களும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு