தமிழ்நாடு

'தோணி' கடலில் மூழ்கியதால், 9 மீனவர்கள் தத்தளிப்பு : மாலத்தீவு அருகே உயிர்பிழைத்த அதிசயம்

மாலத்தீவு அருகே நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் 9 பேரை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டு கரைசேர்த்தனர்.

தந்தி டிவி
தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து 9 பேருடன் மீன் பிடிப்போருக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்றது ஒரு தோணி. மாலத்தீவு அருகே நடுக்கடலில் சென்ற போது திடீரென காற்றின் வேகத்தில் தோணி அலைக்கழிக்கப்பட்டு தத்தளித்துள்ளது. செய்வதறியாது உயிருக்கு போராடிய நிலையில், தோணி கடலில் மூழ்கியது. நல்வாய்ப்பாக மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி நோக்கி மற்றொரு தோணியில் வந்தவர்கள், சக மீனவர்கள் 9 பேரையும் பத்திரமாக மீட்டு கரைசேர்த்தனர். காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றத்தில் சிக்கிய அவர்கள், தாங்கள் உயிருடன் மீட்கப்பட்டதை மறுபிறவி எடுத்ததாக கூறுகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"