தமிழ்நாடு

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் : 10 -ஆம் தேதி முதல் தொடங்கும்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் பணி வரும் 10 -ஆம் தேதி தொடங்குகிறது.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் பணி வரும் 10 -ஆம் தேதி தொடங்குகிறது. ஜோலார்பேட்டையில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சக்கர குப்பம் தரைமட்ட குடிநீர் நீர்த் தேக்கத் தொட்டியில் இருந்து, பார்ச்சம்பேட்டை ரயில்வே கேட் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில், ராட்சத குழாய் அமைக்கும் பணி இரவு - பகலாக நடைபெற்று வருகிறது. இதனை சென்னை குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த பணிகள் நிறைவடைந்து, வரும் 10-ஆம் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்