தமிழ்நாடு

28-வது நாள் அத்திவரதர் உற்சவம்: ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம்

விடுமுறை நாளான இன்று, திரளான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.

தந்தி டிவி

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி, கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் ஒவ்வொரு நிற பட்டாடை அலங்காரத்தில், அத்திவரதர் அருள்பாலித்து வருகிறார். உற்சவத்தின் 28ஆம் நாளான இன்று, வெளிர் நீலநிறப் பட்டாடை அலங்காரத்தில் காட்சியளித்து வருகிறார், அத்திவரதர்.

வார விடுமுறை தினமான நேற்று மட்டும், இரண்டரை லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்று வரை 37 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ள நிலையில், இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது சயன நிலையில் அருள்பாலித்து வரும் அத்திவரதர், ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் நின்ற நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்