சென்னை வியாசர்பாடியில் உள்ள சிவப்பிரகாச சுவாமிகள் மடத்தின் பின்புறம், முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டுச் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை வழிபாட்டிற்காக வந்த பக்தர் ஒருவர், புதரில் முகம் மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஆண் சடலம் கிடப்பதைக் கண்டு காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த வியாசர்பாடி காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மர்ம நபர் யார், அவரைக்கொலை செய்த கொலையாளிகள் யார் என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.